எரியாத மின்விளக்கு

Update: 2025-06-15 07:56 GMT

தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வடலிகாட்டுவிளை தெருவில் நாராயணசாமி கோவிலின் அருகில் சாலையோரத்தில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள தெருவிளக்கு பல நாட்களாக பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் இரவு நேரம் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை அகற்றி விட்டு புதிய விளக்கை பொருத்தி எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-லிங்கேஸ்வரன், தெற்கு சூரங்குடி.

மேலும் செய்திகள்

மயான வசதி