கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஆறுமுகபுரம் அருகில் டாக்டர் குளம் உள்ளது. இந்த குளத்தின் மடையின் மேற்கு புறம் அமைக்கப்பட்டிந்த பாதுகாப்பு சுவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெய்த கனமழையால் சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. அதன்பிறகு சேதமடைந்த சுவர் இதுவரை சீரமைக்கப்படவில்லை. மேலும் வரும் மழை காலத்தில் குளத்தில் வரம்பு உடைந்து தண்ணீர் வெளியேற வாய்ப்பு உள்ளது. இதனால் அருகில் உள்ள கிராமங்கள் பாதிக்கப்படம் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குளத்தின் மடை பகுகுதியில் சேதமடைந்த பாதுகாப்புச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.