பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கட்டப்பட்டிருந்த பொது கழிப்பறை இடித்து அகற்றப்பட்டது. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அங்கு புதிதாக பொது கழிப்பறை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.