அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்ணீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. இதனால் இந்த தொட்டி, விளம்பரம் செய்யும் சுவராக மாறியுள்ளது. பயன்பாட்டில் இல்லாத இந்த தண்ணீர் தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.