அரியலூர் மாவட்டம் சென்னிவனம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இங்குள்ள சாலைகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக நின்று கொண்டு பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் கடிக்க பாய்கின்றன. இதனால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் பல இடங்களில் சாலைகளின் குறுக்கும் நெடுக்குமாக செல்லும் தெருநாய்களால் விபத்து அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி செலுத்தி அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.