பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பஸ் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்பகுதியில் திருட்டு உள்ளிட்ட சட்ட விரோத செயல்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அவை பழுதடைந்து செயல்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் நடக்கும் சட்ட விரோத செயல்களை கண்காணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.