தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுவிளை சந்திப்பில் குத்துக்கல் குளம் உள்ளது. இந்த குளத்தை அப்பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த குளம் முறையாக பராமரிக்காததால் செடிகொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், தண்ணீர் மாசடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குளத்தை தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.