திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தஞ்சாவூர், சென்னை பஸ்கள் நிற்கும் பகுதியில் இலவச சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை தினமும் ஏராளமான பஸ் பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த கழிப்பிடம் முறையாக பராமரிக்கப்படாமல் கடும் துர்நாற்றம் வீசுவதால், நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கழிப்பிடத்தில் ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.