விக்கிரவாண்டி அருகே அன்னியூர், வெள்ளேரிப்பட்டு, சித்தேரி மற்றும் செம்மேடு ஆகிய கிராமங்களில் உள்ள குளங்கள் பராமரிப்பின்றி தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் மழைக்காலத்தில் குளத்தில் அதிகளவில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் குறைவது மட்டுமின்றி, குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே கிராம மக்கள் நலன் கருதி குளத்தை தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.