மதுரை பெரியார் நிலையத்திலிருந்து அப்பன் திருப்பதி வழியாக வெள்ளியங்குன்றம் செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், ஆஸ்பத்திரிக்கு செல்லும் பொதுமக்கள் குறிப்பாக கர்ப்பிணிகள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர். எனவே அப்பகுதி மக்கள் நலன் கருதி மேற்கண்ட வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.