அரியலூர் மாவட்டம் ரெட்டிபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது முனியங்குறிச்சி கிராமம். இங்கு ரோட்டிற்கு மேற்கு புறத்தில் சின்னேரி உள்ளது. இந்த ஏரியில் தான் பொதுமக்கள் குளித்து வந்தனர். மேலும் இங்கு ஆடுகள் மற்றும் மாடுகள் மேய்ந்துவிட்டு தண்ணீர் அருந்தி வந்தன. ஆனால் சில ஆண்டுகளாக இந்த ஏரியில் பொதுமக்கள் குளிப்பது இல்லை. மேலும் சில ஆண்டுகளாக இந்த ஏரியில் 100 நாள் பணி நடைபெறவில்லை .ஏரியை ஆழப்படுத்தவும் இல்லை. மேலும் ஏரிக்கரை முழுவதும் அடர்ந்த கருவேல முட்கள் வளர்ந்து காடு போல் காட்சியளிக்கிறது. இதனால் மழைகாலத்தில் இந்த ஏரியில் போதுமான அளவு மழைநீரை சேகரிக்க முடியவில்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.