அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தில் உள்ள தேரோடும் வீதிகளில் வரத்து வாய்க்கால் சரிவர சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் தேரோட்டம் நடைபெற்றது. அப்போது மாலையில் திடீரென கனமழை பெய்தபோது சாலையெங்கும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தேரோட்டம் 2 மணி நேரம் நிறுத்தப்பட்டது. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் சற்று வடிந்த நிலையில் மழையை பொருட்படுத்தாமல் கிராம மக்கள் தேரை இழுத்து சென்று சன்னதியில் திருத்தி வழிபட்டனர். அதே சமயம் சாலையில் மழைநீர் வராமல் இருந்தால் கிராம மக்கள் மழையை பொருட்படுத்தாமல் தேரை இழுத்து சென்று இருப்பார்கள். ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேரோடும் வீதிகளில் மழைநீர் வடிகால் வசதிகளை செய்துதர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.