தென்தாமரைக்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட தேரிவிளையில் ஒரு மேல்நிலைநீர் தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் கிடக்கிறது. சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த மேல்நிலைநீர் தேக்க தொட்டி சேமடைந்து காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை இடித்து அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராம்தாஸ், சந்தையடி.