நீரோடையில் பிளாஸ்டிக் கழிவுகள்

Update: 2025-06-01 10:06 GMT

கோத்தகிரி கடைவீதி பகுதியில் நீரோடை ஒன்று செல்கிறது. இந்த நீரோைடயில் பிளாஸ்டிக் கழிவுகள் உள்பட குப்பைகள் கொட்டப்படுகிறது. அத்துடன் புதர் செடிகளும் அடர்ந்து வளர்ந்துள்ளது. இதன் காரணமாக நீரோடையின் நீர்வழித்தடம் அடைக்கப்பட்டு உள்ளது. இதனால் மழை பெய்தால் வெள்ளம் பெருக்கெடுத்து வெளியே வழிந்தோடும் நிலை உள்ளது. எனவே அந்த நீரோடையை தூர்வாரி மீண்டும் குப்பைகள் கொட்டப்படாமல் தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்