கடிக்க வரும் தெருநாய்கள்

Update: 2025-05-25 11:35 GMT

அரியலூர் புறவழிச்சாலையில் ரிதன்யா திருமண மண்டபம் அருகே தெருநாய்கள் ஏராளமான அளவில் சுற்றி வருகின்றன. இவை அந்த வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்ந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படுகின்றன. மேலும் வாகனங்களின் பின்னே குரைத்துக்கொண்டே செல்வதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அச்சத்திலேயே தங்களது வாகனங்களை இயக்கும் சூழல் உள்ளது. அப்பகுதியை சேர்ந்த மக்கள் நடந்து செல்லும்போது அவர்களை கடிக்க பாய்கின்றன. இதன்காரணமாக பலரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்