பயணிகள் அவதி

Update: 2025-05-25 11:11 GMT

கூடலூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால் அங்குள்ள தரைத்தளம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தற்போது மழை பெய்து வருவதால் பஸ் நிலைய பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். எனவே பஸ் நிலைய தரைத்தளத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்