சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கொசு தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கடியால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே இப்பகுதியில் கொசு ஒழிப்பு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்.