அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் மயானத்துக்கு போதுமான இட வசதியில்லை. ஒரு சிறிய இடத்தில் தற்காலிக எரிமேடை அமைத்து பயன்படுத்தப்படுகிறது. இதனால் அருகே உள்ள குடியிருப்புவாசிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மயான பயன்பாட்டுக்கு இடம் ஒதுக்கி எரிமேடை அமைத்து தர வேண்டும்.