மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் ஆக்கூர் பாரதிவீதி உள்ளது. இங்கு பொதுநூலகம் இயங்கி வந்தது. நூலக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. நூலக கட்டிடம் பழுதடைந்ததால் தற்போது காமராஜபுரத்தில் தற்காலிகமாக நூலகம் இயங்கி வருகிறது. வாசகர்களின் நலன் கருதி பாரதிவீதியில் புதிதாக நூலக கட்டிடம் கட்ட வேண்டும். மீண்டும் அப்பகுதியில் நூலகம் இயங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாசகர்களின் எதிர்பார்ப்பாகும்.