திருச்சி கே.கே.நகர் 64 வார்டு சேஷாய நகர், தங்கையா நகர் இரண்டுக்கும் நடுவே 10 ஏக்கர் 25 ஆண்டுகளாக கருவேல மரங்கள் வளர்ந்து காடு போல காட்சி அளிக்கிறது. இதில் விஷ ஜந்துக்கள், கீரி, உடும்பு என அருகில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.