காரியாபட்டி யூனியன் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே விபத்து ஏதேனும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த குடிநீர் தொட்டியை அகற்றி விட்டு புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.