நிழற்குடை வசதி

Update: 2025-03-30 18:15 GMT

அந்தியூர் அருகே உள்ள சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் கால்கடுக்க காத்து நிற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டு வருகிறது. எனவே புதுமேட்டூர் பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்