நடவடிக்கை எடுக்கப்பட்டது

Update: 2025-03-23 08:40 GMT

நாகர்கோவிலில் இருந்து கீரிப்பாறை செல்லும் சாலையில் இறச்சகுளம் சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் எப்போதும் வாகன போக்குவரத்துடன் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த சாலையில் இறச்சகுளம் சந்திப்பு உள்பட ஏராளமான இடங்களில் வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், வேகத்தடை மீது அடையாள குறியீடு வரையப்படவில்லை. இதனால் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை இருந்து வந்தது. இதுபற்றி ‘தினத்தந்தி’ புகார்பெட்டியில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வேகத்தடை மீது அடையாள குறியீடு வரைந்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தியை வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்