மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் இயங்கி வரும் அரசு ஆஸ்பத்திரியில் இயங்கி வரும் சித்தா பிரிவு கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சித்தா கட்டிடத்தை சீரமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?