அரியலூரில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகம் முன்பும், வளாகத்தின் உள்ளேயும் தெருநாய்கள் அதிகளவில் சுற்றி வருகின்றன. இவை அங்கு வருபவர்களை கடிக்க பாய்கின்றன. மேலும் சாலையில் வாகனங்கள் செல்லும்போது அதன் குறுக்கே பாய்கின்றன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்.