கோத்தகிரியில் ஆதிதிராவிடர் மாணவர் விடுதிக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து கிடக்கின்றன. இதன் காரணமாக புதிய குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அந்த குழாய்களை சாலைக்கு அடியில் பதிக்காமல் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைக்கு மேல் அமைத்து உள்ளனர். இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த குழாயை சாலைக்கு அடியில் அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.