பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் மயானம் உள்ளது. இந்த மயானத்தை சுற்றி தற்போது ெசடி, கொடிகள் மற்றும் கருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. மயானத்துக்கு செல்லும் பாதையையும் அவை ஆக்கிரமித்துள்ளன. இதனால் மயானத்துக்கு இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய செல்லும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே மயான பகுதியில் புதர்களை அகற்ற வேண்டும்.