மதுரை தபால் தந்தி நகர், பார்க் டவுன் அருகில் உள்ள மல்லிகை 3-வது தெரு பகுதியில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி மிகவும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் முறையாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.