திருச்சி கிராப்பட்டி பகுதியில் ஏராளமான தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. இவை இந்த சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகளை கடிக்க துரத்துவதினால் அவர்கள் நிலை தட்டுமாறி கீழே விழும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுவர்- சிறுமிகளை தெருநாய்கள் கடிக்க துரத்துவதினால் இப்பகுதியில் உள்ள பெற்றோர் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.