சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகளவில் உள்ளது. இதனால் இரவில் சரியான தூக்கமின்றி குழந்தைகள், முதியோர், பெண்கள் அவதியடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் கொசுக்கடியால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?