அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் முத்துவாஞ்சேரி கிராமத்தில் மருதையாறு கொள்ளிடம் ஆற்றில் வந்து இணையும் ( கலக்கும்) பகுதியாக உள்ளது. இதனால்மருதையாற்றில் அதிக தண்ணீர் வரும்போது கரையைமீறி மேலே வந்து அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்து நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விடுகின்றன. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர் எனவே மருதையாற்றின் கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.