அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே முக்குளம் மற்றும் நெல்லித்தோப்பு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இங்குள்ள பிற்படுத்தப்பட்டோருக்காக முக்குளம் கிராமத்தில் இருந்து நெல்லித்தோப்பு செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாடு இருக்கும் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வைத்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.