‘தினத்தந்தி’க்கு பாராட்டு

Update: 2024-10-06 18:26 GMT

ஈரோடு மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட எஸ்.எஸ்.பி. நகரில் சமுதாயக்கூடம் அருகே புற்களும், முட்செடிகளும் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. இதை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற செய்தி ‘தினத்தந்தி’ புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். உடனே எஸ்.எஸ்.பி. நகரில் சமுதாயக்கூடம் அருகே புதர் அகற்றப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்

மயான வசதி