ரெயில் பயணிகள் அவதி

Update: 2024-09-01 11:26 GMT

கரூர் மாவட்டம் குளித்தலை ரெயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான ரெயில் பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ரெயில் நிலையத்தில் போதிய மின்விளக்கு வசதி இல்லாமல் உள்ளதால் இரவு நேரத்தில் நடைமேடைகள் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் முதியவர்கள், பெண்கள் ரெயிலில் இருந்து இறங்கவும், ஏறவும் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்