இருக்கைகள் அமைக்கப்படுமா?

Update: 2024-08-25 11:16 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் காத்திருப்போர் அறையில் இருக்கைகள் இல்லை. இதனால் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள் கடும் சிரமத்துடன் நின்று கொண்டு இருக்க வேண்டிய நிலை உள்ளது. சிலர் குழந்தைகளை தூக்கிக்கொண்டு காத்து நிற்பதை காண முடிகிறது. எனவே பொதுமக்கள் காத்திருப்போர் அறையில் இருக்கைகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்