தெருநாய்கள் தொல்லை

Update: 2024-08-11 11:25 GMT

குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அத்துடன் அந்த வழியாக நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்