கல்லூரி மாணவ- மாணவிகள் அவதி

Update: 2024-07-21 11:33 GMT

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் ஏராளமான மாணவ- மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில் கல்லூரியில் போதிய கழிவறை மற்றும் தண்ணீர் பற்றாக்குறையால் சுகாதாரமற்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் மாணவ- மாணவிகளுக்கான விளையாட்டு மைதானம் இல்லாததாலும், சுற்றுப்புறம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாலும் மாணவ- மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்