பன்றிகள் தொல்லை

Update: 2024-07-21 11:33 GMT

அரியலூர் புதுமார்க்கெட் தெரு பகுதியில் பன்றிகள் தொல்லை அதிகரித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இப்பகுதியை சுற்றிலும் கழிவுநீர் தேங்கி வருகின்றன. இதனால் இப்பகுதியில் உள்ள பன்றிகள் அந்த கழிவுநீரில் உலாவிக்கொண்டு வருகின்றன. மேலும் இவை இந்த பகுதியை சேர்ந்த மக்களுக்கு நோய் ஏற்படுத்தும் வகையில் உள்ளன. இதனால் பெண்களும், குழந்தைகளும் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்