பயணிகள் அவதி

Update: 2024-07-21 08:12 GMT

கொட்டாரம் தபால் நிலையத்தையொட்டி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கம்பியினால் ஆன இருக்கைகள் சேதமடைந்து பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்