பாதியில் நிற்கும் பணி

Update: 2024-07-14 11:54 GMT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் ஒரு பகுதியில் சுற்றுச்சுவர் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. அங்கிருந்த பழைய சுற்றுச்சுவர் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இது புதிய சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இதனால் புதிய சுற்றுச்சுவரின் ஒரு பகுதியும் சேதம் அடைந்தது. எனவே புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணியை மீண்டும் தொடங்கி விரைவாக முடிக்க வேண்டும்.

மேலும் செய்திகள்