சாலையில் கொட்டப்படும் கழிவுகள்

Update: 2024-07-14 11:41 GMT

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் சாய் விக்னேஷ் நகரில் சாலையின் நடுவில் இறைச்சி கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி வழியாக காலையில் நடை பயிற்சியில் ஈடுபடுபவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கழிவுகளை அகற்றவும், சாலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்