பொதுமக்களை கடிக்க பாயும் தெருநாய்கள்

Update: 2024-07-14 10:46 GMT

அரியலூர் மாவட்டம் வாரணவாசி கிராமத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இவை சாலையில் வாகனங்கள் செல்லும்போது சாலையின் குறுக்கே வந்து விழுகின்றன. இதன்காரணமாக அந்த வழியாக வரும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் இந்த தெருநாய்கள் இரவு, பகலாக குரைத்துக்கொண்டே அந்த வழியாக நடந்து செல்பவர்களை கடிக்க பாய்கிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

மயான வசதி