சாலையில் படுத்து கிடக்கும் மாடுகள்

Update: 2024-07-07 15:57 GMT


மதுரை மாவட்டம் கூடல்நகர் மற்றும் ஆனையூர் நகர் பகுதிகளில் தினமும் இரவு நேரங்களில் மாடுகள் சாலையில் கூட்டம், கூட்டமாக ஆக்கிரமித்து படுத்துள்ளன. இதனால் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் மாட்டின் மீது மோதி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்துள்ள மாடுகளை பிடித்து அப்புறப்படுத்தவும், உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து விபத்துகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்