செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் ராஜாஜி தெருவில் தரைபாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தில் ஒரு பகுதியில் உள்ள தூண் சிதலமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதில் கனரகவாகனங்கள் செல்வதால் உடைந்து விழும் நிலை ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தரைபாலத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.