உடைந்து கிடக்கும் கால்வாய் மூடி

Update: 2024-07-07 10:17 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் மீது சிமெண்டு தளம் அமைத்து, நடைபாதை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. இதில் சில இடங்களில் கழிவுநீர் கால்வாயை சீரமைக்க வசதியாக இடைவெளி விட்டு அதன் மீது மூடி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மூடிகள் உடைந்து கிடக்கிறது. இதனால் அதன் மீது நடந்து செல்லும் பொதுமக்கள் தவறி கால்வாய்க்குள் விழும் அபாயம் காணப்படுகிறது. எனவே அந்த மூடிகளை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்