நடவடிக்கை தேவை

Update: 2024-07-07 08:25 GMT

தேரிவிளை சந்தையடியில் அரசு தொடக்கப்பள்ளி சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னால் செயல்பாட்டில் இருந்தது. தற்போது பயன்பாட்டில் இல்லாத இந்த பள்ளியின் 2 கட்டிடங்கள், கழிவறைகள் மற்றும் மதில் சுவர்கள் மிகவும் சேதம் அடைந்துள்ளன. கேட்பாரற்று திறந்து கிடக்கும் இந்த கட்டிடங்கள் சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கட்டிடங்களையும் மற்றும் பள்ளி வளாகத்தையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ் சந்திரசேகரன், சந்தையடி.

மேலும் செய்திகள்