சிதிலமடைந்த சிமெண்டு தளம்

Update: 2024-06-30 15:40 GMT

அரியலூர்-செந்துறை சாலையை பல்வேறு பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் எப்போதும் இந்த சாலை பரபரப்பாக காணப்படும். இந்நிலையில் இந்த சாலையோரம் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் மேல் பகுதியில் சிமெண்டு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக பொதுமக்கள் நடந்து செல்கின்றனர். தற்போது இந்த சிமெண்டு தளம் உடைந்து கம்பிகள் வெளியில் நீட்டியவாறு காணப்படுகிறது. பல இடங்களில் பள்ளங்களும் காணப்படுகின்றன. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்