கழிப்பிடத்தில் தண்ணீர் இல்லை

Update: 2024-06-30 11:41 GMT

கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆனால் இந்த கழிப்பிடத்தில் தண்ணீர் வசதி இல்லை. இதன் காரணமாக அங்கு துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதோடு அந்த கழிப்பிடத்தை பயன்படுத்த முடியாத நிலை தொடர்கிறது. இதனால் அங்கு வந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள். எனவே அந்த கழிப்பிடத்துக்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும். 

மேலும் செய்திகள்