சேதம் அடையும் சுற்றுச்சுவர்

Update: 2024-06-30 11:39 GMT

கோத்தகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70 லட்சம் செலவில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஊராட்சி ஒன்றிய அலுவலக பின்புறம் உள்ள அந்த சுற்றுச்சுவரை ஒட்டி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. அவை சுற்றுச்சுவரில் உரசியபடி நிறுத்தப்படுவதால், சேதம் அடைந்து வருகிறது. இதனால் சுற்றுச்சுவர் வலுவிழக்கும் அபாயம் காணப்படுகிறது. எனவே அரசு பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்