சுடுகாடு ஆக்கிரமிப்பு

Update: 2024-06-30 11:36 GMT

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள முத்துசேர்வாமடம் ஊராட்சியில் உள்ள முக்குளம் மற்றும் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கு முக்குளம் கிராமத்தில் இருந்து நெல்லித்தோப்பு செல்லும் சாலையில் சுடுகாடு உள்ளது. அந்த சுடுகாடு இருக்கும் பகுதியை சிலர் ஆக்கிரமிப்பு செய்து, அவர்களது கட்டுபாட்டில் வைத்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் உடலை எடுத்து சென்று தகனம் செய்யக்கூட வழி இல்லாமல் நான்கு புறமும் முள் வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்